இறைவன் எமக்கு செல்வச் செழிப்பை வாரி வழங்கினாலும், வறுமையை உண்டாக்கி பசி, பட்டினியோடு வாழச் செய்தாலும் இவைகளை அல்லாஹ்தான் எமக்கு இவ்வாறு அளித...
அல்லாஹ் அளித்த வாழ்க்கையையும், அவன் அளித்த செல்வச் செழிப்புக்களையும், வறுமையையும் இறைவனுக்காகப் பொருந்திக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இறைவன் அளித்த செல்வத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்தாட்டுவது தான் உண்மையான முஃமினின் பண்பாகும். மாறாக இறைவனையும், மௌத்தையும், மறுமையையும் மறந்து பேராசை கொள்பவர் மிகப் பெரும் துர்ப்பாக்கிய சாலியாக மாறி விடுகின்றான்.
உண்மையில் ஒரு மனிதன் செல்வச் செழிப்போடு வாழ்கின்றான் என்றால் அவருக்கு நிச்சயமாக அச்செல்வம் ஒரு சோதனைதான்.
ஏனென்றால் அச் செல்வத்தை அவன் எவ்வாறு சம்பாதித்தான்?, எவ்வாறு செலவழித்தான்?, எவ்வாறு அச் செல்வத்தை பராமரித்தான்? போன்ற இறைவனின் கேள்வி கணக்குகளுக்கு அவன் நிச்சயமாக பதில் சொல்லியே தீர வேண்டும்.
உங்கள் செல்வங்களும், உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். அல்லாஹ்விடமே மகத்தான (நற்)கூழி உள்ளது.எனவே செல்வம் என்பது ஒரு சோதனை என்று இறைவன் கூறுகையிலும் அச் செல்வத்தில் மூழ்கி அதில் மோகம் கொள்பவர்களை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் துர்பாக்கியசாலிகள் என்று எச்சரித்துள்ளார்கள்.
(அல்-குர்ஆன்:- 64:15)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பரமான) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவனாவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தி அடைவான். (மாறாக செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தி அடைவான்.எனவே இறைவன் எமக்கு அளிக்கக்கூடிய செல்வத்தை நாம் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மாறாக இந்த துன்யாவின் மீது மோகம் கொண்டு துன்யாவை சேகரிக்கும் துர்பாக்கியசாலியாக ஆகிவிடக் கூடாது.
(புஹாரி:- 6,435)
COMMENTS