ஜனாஸா தொழுகையின் பரளுகள் அனைத்தும் சுருக்கமாகவும், விரிவாகவும்.
ஜனாஸா தொழுகைக்கு மொத்தமாக 7 பர்ளுகள் உள்ளன.
01) நிய்யத் வைக்க வேண்டும்.
02) நான்கு தக்பீர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
03) நின்று தொழ சக்தி உள்ளவர்கள் நின்று தொழ வேண்டும்.
04) முதலாவது தக்பீருக்குப் பின்னால் சூராஃ பாஃத்திஹாவை ஓத வேண்டும்.
05) இரண்டாவது தக்பீருக்குப் பின்னால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.
06) மூன்றாவது தக்பீருக்குப் பின்னால் அந்த மையத்திற்காக வேண்டி துஆப் பிராத்தனை செய்ய வேண்டும்.
07) நான்காவது தக்பீருக்குப் பின்னால் ஸலாம் கொடுத்தல் வேண்டும்.
விரிவாக்கம்:-
01) முதலாவது தக்பீருக்குப் பின்:-
அல்ஹம்து அத்தியாயத்தை (சூரஃ ஃபாத்திஹாவை) ஓதிக் கொள்ள வேண்டும்.
ஆதாரம்:- புகாரி, 1335
02) இரண்டாவது தக்பீருக்குப் பின்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத்துக் கூற வேண்டும்.(ஸலவாத்துல் இப்ராஹிமிய்யா சிறந்தது)
ஸலவாத்துல் இப்ராஹிமிய்யா
”அல்லாஹும்ம ஸல்லி அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யிதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஸெய்யிதினா இப்ராஹீம வஅலா ஆலி ஸெய்யிதினா இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யிதினா முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஸெய்யிதினா இப்ராஹீம வஅலா ஆலி ஸெய்யிதினா இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்."ஆதாரம் நூல்:- பைஹகி ,4/39
03) மூன்றாவது தக்பீருக்கு பின்:-
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.
ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல்வேறு துஆக்களைக் கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.
குறைந்தது:-
●ஆண்:- அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு
●பெண்:- அல்லாஹும்மஃபிர் லஹா வர்ஹம்ஹா
பொருள்:- இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
முடியுமானவர்கள்:-
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்.
அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601
பொருள்:- இறைவா..!
இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!
கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
04) நான்காவது தக்பீருக்கு பின்:-
ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக் கொள்ள வேண்டும்.
சிறந்த தேவையான பதிவு
ReplyDelete