புன் முறுகள் சிறிப்பு, பண்பும்-பணிவும் கொண்ட அணுகுமுறை, உபசரிக்கும் குணம், அடுத்தவருக்கு உதவி செய்யும் எண்ணம் போன்ற இந்தக் குணங்கள் இரு...
புன் முறுகள் சிறிப்பு, பண்பும்-பணிவும் கொண்ட அணுகுமுறை, உபசரிக்கும் குணம், அடுத்தவருக்கு உதவி செய்யும் எண்ணம் போன்ற இந்தக் குணங்கள் இருப்பவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
இவர்களின் இந்தக் குணங்களால் முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் மனதில் கூட இடம் பிடித்து விடுவார்கள்.
அடுத்தவரிடம் நற்பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.
நாம் அடுத்தவருக்கு செய்கின்ற உதவி அது ஏதோ ஒரு விதத்தில், யாரோ ஒருவர் மூலமாக நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு எமக்கு ஏதோ ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
பிறருக்கு உதவி செய்வ தென்பது ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். எவ்வித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
ஒரு நாள் மாலை நேரத்தில் ஒரு வயதான செல்வந்தப் பெண்மணி தனது கார் அருகில் மிக நேரமாக நின்று கொண்டிருப்பதை ஒருவர் கவனித்தார்.
அந்தப் பாதையில் வேறு வாகனங்கள் செல்கின்ற பொழுது அந்தப் பெண்மணி கையை நீட்டி நிறுத்தப் பார்கிறார். ஆனால் எந்த வொறு வாகனமும் நிற்காமல் சென்று கொண்டிருந்தது.
இதைப் பார்துக் கொண்டிருந்த அம்மனிதர் அந்தப் பெண்மணி அருகில் சென்று "என்ன பிரச்சனை அம்மா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி "கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது" என்று கூறினார்.
அப்பொழுது அந்த மனிதர் "நீங்கள் காரில் உட்காருங்கள். நான் டயர் மாற்றித் தருகிறேன்" என்று டயரை மாற்ற ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் சிரமத்தோடு டயரை மாற்றி முடித்தார்.
இதைப் பார்த்த அப் பெண்மணி "உங்களுக்கு நான் எவ்வளவு பணம் கூழியாகத் தர வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அம்மனிதர் "எனது தொழில் வாகனத் நிறுத்தம் செய்வதல்ல. மாறாக நான் இந்த ஊரில் சிறியதாக ஒரு டீக்கடை நடாத்தி வருகின்றேன். அதில் இருந்து வரும் பணமே எனக்குப் போதும். நீங்கள் பணம் எதுவும் தரத் தேவையில்லை" என்றார். "உங்களுக்கு ஒரு துன்பகரமான நேரத்தில் என்னால் முடிந்ததை செய்தேன். அவ்வளவுதான். நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களுக்கு இந்த உதவியைச் செய்யுங்கள்" என்றார்.
அதேநேரத்தில் அப் பெண்மணி அம்மனிதனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றார். வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்தி விட்டு, கடைக்குள்ளே சென்றார்.
அட் டீக்கடை பார்ப்பதற்க்கே மிகவும் பரிதாபமாக இருந்தது. உள்ளிருந்து ஒரு பெண்மணி "என்ன வேண்டும் அம்மா?" என்று கேட்டுக் கோண்டே வெளியே வந்தார்.
அப்பணக்காரப் பெண்மணி டீக்கடையில் இருக்கும் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார். கடையில் அப்பெணும் தனது கணவரும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் மாட்டப்பட்டிருந்தது.
அப் புகைப்படத்திலிருந்த ஆணின் படம், சற்று முன் தனது காரின் டயரை மாற்றியவர் என்று தெரிந்து கொண்டார். என்றாலும் வெளிக் காட்டிக் கெள்ளவில்லை
அப் பெண் ஒன்பது மாதக் கர்ப்பிணி என்பதையும் அவரிடம் சாமார்தியமாகப் பேசித் தெரிந்து கொண்டார்.
"தனக்குக் குடிக்க டீ கொண்டு வாம்மா" என்றார். பின்பு அப்பெண்மனி டீ குடித்து விட்டு ரூ.50,000/- ரூபாய் பணத்தை மேசையின் மேல் வைத்து விட்டு விறுவிறுப்பாக காருக்குள் சென்று விட்டார்.
கடையிலிருக்கும் அப்பெண் டீக் கோப்பையை கழுவி வைத்து விட்டு வந்து பார்க்கும் பொழுது மேசையில் கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்பணத்தை எடுத்துக் கொண்டு காருக்குள் இருக்கும் பெண்மணியிடம் கொடுக்க ஓடினார். அதற்குள் கார் இடத்தை விட்டுச் சென்று விட்டது.
பின்பு அக்கடையில் இருக்கும் பெண்மணி கடையிலுள்ள வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு கையில் அந்தச் செல்வந்தப் பெண்மணி விட்டுச் சென்ற பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
தனது பிரசவ செலவுக்கு என்ன செய்வதென்று புலம்பிக் கொண்டிருந்த தன் கணவருக்கு இந்தப் பணத்தைக் காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.
ஆனால் அவளது கனவரோ மிகுந்த அசதியால் தூங்கிக் கொண்டு இருந்தார்.
ஆம்,நண்பர்களே...
இறைவனின் படைப்பிலுள்ள அத்தனை உயிருள்ள, உயிரற்ற படைப்புக்களை நேசிக்கும் நெஞ்சம் எமக்கு இருக்க வேண்டும்.
தன் வாழ்வில் அன்பு பிறருக்கு செலுத்துபவர்களால் மட்டுமே பிறருக்கு உதவ முடியும். அதில் மகிழ்ச்சியும் காண முடியும்...