நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்வில் கண்கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

SHARE:

தற்போதைய உலக மக்களினால் 200 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய முஹம்மத் நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்ப...

தற்போதைய உலக மக்களினால் 200 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களால் பின்பற்றப்படக்கூடிய முஹம்மத் நபி ﷺ அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை பல ஹதீஸ்கள் மூலமாகவும், வரலாற்றுத் தொடர்கள் மூலமாகவும் நாம் அறிந்திருக்கின்றோம்.

ஆடம்பரம் இல்லாத ஒரு தளபதி. கொலை, கொள்ளை, மது, மாது, சூது இவைகளுக்கு எதிராகப் போராடிய மிகப்பெரும் சக்கரவர்த்தி. பெண்கள் சுதந்திரத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த உலகத்திற்குத் தந்தவர். பல நாட்டு அரசர்களும் உங்களுக்கு என்ன வேண்டும்?, தேவையான அனைத்தையும் நாங்கள் தருகிறோம் என்று சொல்லியும் மறுத்தவர் முஹம்மத் நபி ﷺ அவர்கள். இப்படியான ஓர் மிகப் பெரும் சக்கரவர்த்தியின் நிலை அன்று எப்படி இருந்தது?.

நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது எமக்குக் கண்ணீரை வரவழைக்கும் நிகழ்வுகளே ஏராளமாக உள்ளன. அப்படியாய கண்ணீரை வரவழைக்கும் ஓர் நிகழ்வைப் பற்றிப் பார்ப்போம்.
உமர் (ரழி) அவர்கள் (தற்போது) மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவு கூர்ந்தார்கள். அந்த நேரத்தில் "நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம் கூடக் கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டுக் கிடப்பதை நான் கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
(முஸ்லிம்:- 5,698)
சுப்ஹானல்லாஹ்...!

எப்படிப்பட்ட ஓர் வருமை. நீதிக்காகவும் நேர்மைக்காகவும் போராடிய மாபெரும் தலைவரின் நிலை இப்படித்தான் இருந்தது. தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வதற்காகவாவது ஓர் ஈச்சம் பழம் கூட இல்லாத ஓர் நிலை!.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக்கொண்டு தொழுவார்கள்.
(புஹாரி:- 730)
மாபெரும் அரசரின் வீடு இப்படித்தான் இருந்தது. ஒரு பாய், அந்தப் பாய் தான் இரவில் கதவாகவும், பகலில் விரித்துப் படுப்பதற்குப் படுக்கையாகவும் இருந்திருக்கின்றது. இவ்வாறு தான் அவர்களுடைய வீடும் அன்றாட வாழ்க்கையும் இருந்துள்ளது. இன்னும் இது போன்ற கண்களை கசக்க வைக்கும் ஏராளமான செய்திகள் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கின்றன.

ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த வாழ்க்கையை விருப்பத்தோடு தான் ஏற்றுக் கொண்டார்கள். மாறாக அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்பியிருந்தால் அவர்களைப் போன்று இந்த உலகத்தில் ஆடம்பரமாக வாழ எவராலும் முடியாது என்ற அளவுக்கு வாழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் இறைவனுடைய புறத்திலிருந்து நபியே! நீங்கள் கேட்டால் இந்த உஹது மலையைக் கூட உங்களுக்குத் தங்கமாக மாற்றித் தருவதற்கு நாங்கள் தயார் என்று வந்த செய்திகளையும் நாம் அறிந்திருக்கின்றோம்.

ஆகவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏழ்மையைத் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்தும் காட்டினார்கள். எனவே அவர்களுடைய அந்த வாழ்க்கைத் தத்துவங்களை எமது வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்வானாக....

ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!

COMMENTS

 உங்களில் சிறந்தவர் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே - (நபிமொழி) 

 எனவே பிறரும் கற்றுக்கொள்ள இப்பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




Name

அகீதாப் பிரிவுகள்,6,அமற்களின் சிறப்பு,14,அல்-குர்ஆனைப் பற்றிய தகவல்களும் / சிறப்புகளும்,5,அல்லாஹ்வின் அமரர்கள் (மலக்குமார்கள்),2,அன்றாட வாழ்வில் இஸ்லாம்,21,இறை நேசர்கள்,4,இறைவனின் அற்புதப் படைப்புக்கள்,10,இஸ்லாமிய மருத்துவம்,10,இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்,2,இஸ்லாமும் - அறிவியலும்,4,உத்தம சஹாபாக்கள்,6,உழ்ஹிய்யா / அகீகா பற்றிய விளக்கங்கள்,2,குற்றங்களும் - அதற்கான தன்டனைகளும்,15,கொரோனா வைரஸ்,5,சிந்தனை மலர்கள்,23,சுத்தம் பற்றிய விளக்கங்கள்,4,திக்ர்களும் அதன் சிறப்புக்களும்,5,தீர்ப்புக்கள் (பத்வாக்கள்),3,துஆக்களும் அதன் சிறப்புப்களும்,12,தொழில்நுட்பத் தகவல்கள்,2,தொழுகையின் சிறப்புக்கள்,10,நபிமார்களின் வரலாற்றில் ஓர் ஏடு,4,பெண்கள் பகுதி,7,மறுமை நாள்,11,முஹம்மத் ﷺ அவர்கள்,17,மௌத் (மரணம்),7,ரமலான் நோன்பின் மான்புகள்,4,ஜனாஸா பற்றிய விளக்கங்கள்,3,ஜும்ஆ உடைய நாளின் சிறப்பு,8,ஸலவாத்துக்களும் அதன் சிறப்புகளும்,3,
ltr
item
As-Safeenah : நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்வில் கண்கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் வாழ்வில் கண்கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibIMdtqzQ6oKzuWLUDTwSSXPAbhKZejJHEcmAOR-81rJFGyn_h8I2zGZ3_U_feuqKtSRcEeEwflJALyCkx1tLL_sRqwmSu6z3kDXUqq6qDZDjMneKPziWryne89xaamyBbX7PpnOtLwg5o/s1600/Thumbnail_1588554479760.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibIMdtqzQ6oKzuWLUDTwSSXPAbhKZejJHEcmAOR-81rJFGyn_h8I2zGZ3_U_feuqKtSRcEeEwflJALyCkx1tLL_sRqwmSu6z3kDXUqq6qDZDjMneKPziWryne89xaamyBbX7PpnOtLwg5o/s72-c/Thumbnail_1588554479760.jpg
As-Safeenah
https://www.assafeenah.com/2020/05/blog-post_4.html
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/2020/05/blog-post_4.html
true
915509540911267059
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content