இவ்வுலக துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கும் அதிகமாக துன்பங்கள் நிறைந்த அந்த மறுமை நாளில் யாருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்!?
அதேசமயம் இவ்வுலகில் துன்பத்தோடும், துயரத்தோடும் ஒருவர் இருக்கின்ற பொழுது அந்த நேரத்தில் அவருக்கு ஒருவர் உதவிக் கரம் நீட்டினால் இதன் மூலம் அல்லாஹ் உதவி செய்த அந்த நபருக்கு ஓர் மிகப் பெரும் பாக்கியத்தை வைத்திருக்கிறான்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "யார் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாறோ! அவருடைய துன்பத்தை அல்லாஹ் மறுமை நாளில் நீக்குகின்றான்."ஸுப்ஹானல்லாஹ்...!
(புஹாரி)
இந்த உலகத்தில் ஒருவர் துன்பத்தில் இருக்கும் பொழுது அவருக்கு உதவும் பட்சத்தில் உதவி செய்த அந்த மனிதருக்கு இவ்வுலக துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கும் அதிகமாக துன்பங்கள் நிறைந்த அந்த மறுமை நாளில் அல்லாஹ் உதவி செய்கிறான்.
ஆகவே தற்காலத்தில் பரவும் நோய்கள் மூலமாகவும் மற்றும் சில காரணங்களினாலும் நிறைய மக்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே அவர்களுடைய துன்பத்தில் நாம் பங்கு கொண்டு அவர்களுக்காக வேண்டி எம்மால் முடிந்த உதவிக் கரங்களை நீட்டுவோம்.
இவ்வுலகத்தில் உதவி செய்வோம்..!
மறுமை நாளில் அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள்வோம்...!
COMMENTS