நரகில் கொடுக்கப்படும் கொடூர தண்டனைகள்

SHARE:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்ற நரக வேதனைகள்

அல்லாஹ்வும் அவனது இரசூலும் ஒரு மனிதனுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் நாளை மறுமை நாளில் அவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் நரகத்தில் கொடுக்கப்படும் என்பதை அல்லாஹ் தனது அருள் மறையாம் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்யுள்ளான். எனவே அவைகள் பின்வருமாறு...

விலங்கிடப்படுதல்...

அப்பொழுது அவர்களுடைய கழுத்துகளில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்களோ கொதிக்கும் நீரில் (தூக்கி) வீசப்படுவார்கள். (அதன்) பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.
[திருக்குர்ஆன்:- 40 : 71,72]


நெருப்பினால் உருவாக்கப்பட்ட ஆடை...

(ஏக வல்லோன் அல்லாஹ்வை) மறுத்தோருக்கு எதிராக நெருப்பினால் உருவாக்கப்பட்ட ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்) அவர்களுடைய தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதன் மூலம் அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
[திருக்குர்ஆன்:- 22 : 19,20]


கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்...

 "அவனைப் பிடியுங்கள்! (பிடித்து) அவனை நரகத்தினுடைய மையத்திற்கு இழுத்து வாருங்கள். பின்பு வதவதைக்கும் சுடு நீரை அவன் தலையில் ஊற்றுங்கள்" (என வானவர்களிடம் சொல்லப்படும்.)
[திருக்குர்ஆன்:- 44 : 47,48]

 (ஏக வல்லோன் அல்லாஹ்வை) மறுத்தோருக்கு எதிராக நெருப்பினால் உருவாக்கப்பட்ட ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்) அவர்களுடைய தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதன் மூலம் அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.
[திருக்குர்ஆன்:- 22 : 19,20]


வெப்பம்...

அவர்கள் அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அவற்றில் (எந்த) குளிர்ச்சியும் இல்லை. (மேலும் அவற்றில் எந்த) இனிமையும் இல்லை.
[திருக்குர்ஆன்:- 56 :42-44]

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் (தபூக் யுத்தத்திற்கு) சென்ற பின்பு, யுத்த கலத்திற்கு செல்லாமல் தம் இருப்பிடத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். (அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். "கோடை (காலத்தில்) செல்லாதீர்கள்!" எனவும் அவர்கள் கூறுகின்றனர். "நரகத்தின் நெருப்பு இதை விடவும் வெப்பமானது" என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
[திருக்குர்ஆன்:- 9 : 81]

அங்கு (எவ்வித) குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.
[திருக்குர்ஆன்:- 78 : 24,25]


 குளிர்ச்சி கிடையாது...

(ஏக வல்ல நாயன் அல்லாஹ் விதித்த) வரம்பு(களை) மீறியவர்கள் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கின்றது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
[திருக்குர்ஆன்:- 78 : 21-24]


சூடு போடப்படும்...

அந்நாளில் (மறுமை) நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் (நரக வாசிகளின்) நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்துக்கொண்டது. ஆகவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!" (என்று சொல்லப்படும்.)
[திருக்குர்ஆன்:- 9 : 35]
 உள்ளத்தை தாக்கும் நெருப்பு...

 ஹுதமா என்பது என்னவென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். (மேலும் அது) நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்துக்கொண்டிருக்கும்.
[திருக்குர்ஆன்:- 104 : 5-9]


 புரட்டிப் போடப்படுவார்கள்...

அவர்களின் (நரக வாசிகளின்) முகங்கள் நரகில் புரட்டப்படும் (அந்த) நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? (மேலும்) இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?" எனக் கூறி(கத்துருவார்கள்.)
[திருக்குர்ஆன்:- 33 : 66]


 மேலும் கீழும் வேதனை...

அவர்களின் (நரக வாசிகளின்) மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் "நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!" என (அல்லாஹ்) கூறுவான்.
[திருக்குர்ஆன்:- 29 : 55]


கருகும் தோல்கள்...

எமது வசனங்களை மறுப்போர்களை நரகில் நுழைவிப்போம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் (அந்த) வேதனைகளை அனுபவிப்பதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் உள்ளான்.
[திருக்குர்ஆன்:- 4 : 56]

அவர்களது முகங்களை நெருப்பு (சுட்டுப்) பொசுக்கிவிடும். அதில் அவர்கள் விகாரமானவர்களாக இருப்பார்கள்.
[திருக்குர்ஆன்:- 23 : 104]


சம்மட்டி அடி...

அவர்களுக்காக (நரக வாசிகளுக்காக) இரும்புச் சம்மட்டிகளும் இருக்கின்றன.
[திருக்குர்ஆன்:- 22 : 21]


 கூச்சலும் அலறலும்...

கெட்டவர்கள் (இறைவனுக்கு மாற்றமாக நடந்தவர்கள்) நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலுமே இருக்கும்.
[திருக்குர்ஆன்:- 11 : 106]


 வேதனை குறையாது...

அவர்களை (நரக வாசிகளுக்களை) விட்டும் (தண்டணைகள்) குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்து இருப்பார்கள்.
[திருக்குர்ஆன்:- 43 : 75]


 குறைந்த பட்ச தண்டணை...

“ஒருவருக்கு நெருப்பினால் உருவாக்கப்பட்ட இரு காலணிகள் அணிவிக்கப்பட்டும், அக்காலணிகளின் வெப்பத்தினால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர் தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
[அறிவிப்பாளர்:- அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)]
[நூல்:- முஸ்லிம் - 311]

“எங்கள் இறைவா! இந்த உலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”
[திருக்குர்ஆன்:- 2 : 201]

COMMENTS

 உங்களில் சிறந்தவர் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே - (நபிமொழி) 

 எனவே பிறரும் கற்றுக்கொள்ள இப்பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




Name

அகீதாப் பிரிவுகள்,6,அமற்களின் சிறப்பு,14,அல்-குர்ஆனைப் பற்றிய தகவல்களும் / சிறப்புகளும்,5,அல்லாஹ்வின் அமரர்கள் (மலக்குமார்கள்),2,அன்றாட வாழ்வில் இஸ்லாம்,21,இறை நேசர்கள்,4,இறைவனின் அற்புதப் படைப்புக்கள்,10,இஸ்லாமிய மருத்துவம்,10,இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்,2,இஸ்லாமும் - அறிவியலும்,4,உத்தம சஹாபாக்கள்,6,உழ்ஹிய்யா / அகீகா பற்றிய விளக்கங்கள்,2,குற்றங்களும் - அதற்கான தன்டனைகளும்,15,கொரோனா வைரஸ்,5,சிந்தனை மலர்கள்,23,சுத்தம் பற்றிய விளக்கங்கள்,4,திக்ர்களும் அதன் சிறப்புக்களும்,5,தீர்ப்புக்கள் (பத்வாக்கள்),3,துஆக்களும் அதன் சிறப்புப்களும்,12,தொழில்நுட்பத் தகவல்கள்,2,தொழுகையின் சிறப்புக்கள்,10,நபிமார்களின் வரலாற்றில் ஓர் ஏடு,4,பெண்கள் பகுதி,7,மறுமை நாள்,11,முஹம்மத் ﷺ அவர்கள்,17,மௌத் (மரணம்),7,ரமலான் நோன்பின் மான்புகள்,4,ஜனாஸா பற்றிய விளக்கங்கள்,3,ஜும்ஆ உடைய நாளின் சிறப்பு,8,ஸலவாத்துக்களும் அதன் சிறப்புகளும்,3,
ltr
item
As-Safeenah : நரகில் கொடுக்கப்படும் கொடூர தண்டனைகள்
நரகில் கொடுக்கப்படும் கொடூர தண்டனைகள்
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்ற நரக வேதனைகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCqSvGgnGs5I1g42gwmbKBx834ObJdp-YHbJypqfvqIaUefZwL9FCAGy7tDZ2aA1-q26efbushZLWoCAidWu7OsjS1z1K38Cqjd31sfaJAqZlhKOUDGpUAoZpU82AZWPv8EnIUCVEZ2i3Dmf7f-wL44Bt-tocbp595odSmZNESs5u4B7air4Zp9plbwA/s16000/20220622_233116.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCqSvGgnGs5I1g42gwmbKBx834ObJdp-YHbJypqfvqIaUefZwL9FCAGy7tDZ2aA1-q26efbushZLWoCAidWu7OsjS1z1K38Cqjd31sfaJAqZlhKOUDGpUAoZpU82AZWPv8EnIUCVEZ2i3Dmf7f-wL44Bt-tocbp595odSmZNESs5u4B7air4Zp9plbwA/s72-c/20220622_233116.jpg
As-Safeenah
https://www.assafeenah.com/2022/06/blog-post.html
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/2022/06/blog-post.html
true
915509540911267059
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content