தனது சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்.
விஷம் என்றால் என்ன!?
எமது தேவைகளுக்கு அதிகமாக உள்ள அனைத்தும் விஷமே. அது எமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, இலட்சியமாக, வெறுப்பாக இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்றால் என்ன!?
நாம் எதிர்பார்க்காத ஒன்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.
பொறாமை என்றால் என்ன!?
ஒருவர் மற்றறொருவரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும். அதை அவர் ஏற்றுக் கொண்டால் அதுவே அவருக்கு உத்வேகமாகிவிடும்.
கோபம் என்றால் என்ன!?
ஒருவர் அவரது சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும். ஏற்றுக் கொண்டால் அதுவே சகிப்புத்தன்மையாகிவிடும்.
வெறுப்பு என்றால் என்ன!?
ஒருவர் எப்படி இருக்கிறாரோ! அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது வெறுப்பாகும். ஒருவரை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக் கொள்வது அளவு கடந்த அன்பாகும்.
COMMENTS