மரணச் செலவு...

SHARE:

■மனதை உலுக்கிய உண்மை சம்பவம். நான் எப்போதும் சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையவன். தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு ப...

■மனதை உலுக்கிய உண்மை சம்பவம்.

நான் எப்போதும் சாதாரண மக்களுடன் இயல்பாக பழகும் குணம் உடையவன்.

தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்...

நேன்று மாலை,

குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை குடுங்கய்யா என்றேன்.

அவர் 80 ருபாய் என்றார். பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம். அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு...

அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா?... 70 ரூபாய்க்கு குடுங்க என்றேன். அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்கறீங்க என்றார்.

நான் ஆமாம் என்றேன்.. அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 குடுங்க என்றார் .

அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன்.. அது மனதை என்னவோ செய்ய.... ஏன் அய்யா என்னாச்சு, ஏன் அழறீங்கன்னு கேட்டேன். ஒன்னும் இல்ல சார் என்றார். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .

என் பெயர் ஆவுடையப்பன் (77), என் மனைவியின் பெயர் பார்வதி (73 )

எங்களுக்கு 6 குழந்தைகள்

மிகவும்ஏழ்மையான குடும்பம்..

மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்தோம், பலநாட்கள் நானும், மனைவியும் சாப்பிடுவது கூட இல்லை, இருப்பதை பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவோம். பலநாள் இரவு பட்டினி இருந்திருக்கிறோம். ஒரு நாள்கூட என் மனைவி இதற்காக என்னோடு சண்டை போட்டதில்லை..

பிள்ளைகள் எல்லாம் திருமணம்

முடித்து அவரவர்கள் தனிகுடும்பமாகச் சென்று விட்டனர். எங்களுக்கோ தடுமாறும் வயது, அதனால் பெற்ற மக்களின் வீட்டில் போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில், மூத்த மகனிடம் விபரத்தைச்சொன்னேன்.

அதற்கு அவன், என்னால் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க முடியாது, யாரவது ஒருவர் வரலாம் என்றான். அப்படி நான் மூத்த மகன் வீட்டிற்கும், மனைவி வேறு ஒரு மகன் வீட்டிற்கும் சென்றோம் வேறு வழியின்றி.

47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில் இருப்பது பிடிக்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன். மனைவியின் நினைவுகள் மனதில் போராட இறுதியில் என் மனைவி இருக்கும் மகன் ஊருக்குச் சென்றேன்.

என் மனைவியிடம் சொன்னேன்,

நாம் இருவரும் ஒன்றாக வேறு எங்காவது போய் விடலாமா என்று, மனைவியும் அழுது கொண்டே சம்மதித்தாள். மகன்கள் வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வந்து ஒரு வருடமாகிறது.

பிழைப்புக்காக நான் குழந்தைகளின் பொம்மைகளை நடந்து சென்று விற்கிறேன், தினமும் 80 ரூபாய் முதல் 100 வரை லாபம் கிடைக்கும், இதை வைத்துக் கொண்டு ஜீவனாம்சம் செய்து கொண்டுள்ளோம், இப்போது எனக்கு வயது 77 ஆகிறது, எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம்..

வரும் 100 ரூபாய் வருமானத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து சேமிக்கிறேன், அது எங்கள் மரண செலவிற்க்கு, என் பிள்ளைகளுக்கு அந்த செலவுத் தொந்தரவுகூட வேண்டாம் என அதை மனைவியிடம் கொடுத்து வைக்கிறேன் .

ஒரு நாள், இந்தப் பணம் எதற்கு சேமிக்கிறீர்கள் என்று என்மனைவி

கேட்டாள். நம் மரணச்செலவிற்கு

என்றேன், சத்தமாக கத்தி அழுது விட்டாள். இப்போது என்மனைவியின் பிரார்த்தனை, என் கணவர் மரணிக்கும் அதே நேரத்தில் எனக்கும் மரணத்தைக் கொடுத்து விடு கடவுளே என்று*

"என் பிரார்த்தனையும் அதுவே தான்" என்று அவர் சொல்லவும் ,

இதை கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன் .

நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா என்றேன் ?

அவர்களுக்குத் தெரியாது என்றார்.

எனக்கு மனம் கனத்துப் போனது.

சாதாரண மக்களிடம் தான் எத்தனை எத்தனை வலிகள் மனதில் புதைந்திருக்கின்றன...

சின்ன சின்ன வியாபாரிகளிடமும் பழக்கடைக்காரர்களிடமும் பேரம் பேசாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற படிப்பினையை நான் இம் முதியவரிடம் உரையாடியதன் மூலம் தெரிந்து கொண்டேன்...

( இப்பதிவைப் படித்ததும் நம் மனமும் சற்று கணக்கத்தான் செய்கிறது ....)

 உங்களில் சிறந்தவர் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே - (நபிமொழி) 

 எனவே பிறரும் கற்றுக்கொள்ள இப்பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




Name

அகீதாப் பிரிவுகள்,6,அமற்களின் சிறப்பு,14,அல்-குர்ஆனைப் பற்றிய தகவல்களும் / சிறப்புகளும்,5,அல்லாஹ்வின் அமரர்கள் (மலக்குமார்கள்),2,அன்றாட வாழ்வில் இஸ்லாம்,21,இறை நேசர்கள்,4,இறைவனின் அற்புதப் படைப்புக்கள்,10,இஸ்லாமிய மருத்துவம்,10,இஸ்லாமிய மாதங்களின் சிறப்புகள்,2,இஸ்லாமும் - அறிவியலும்,4,உத்தம சஹாபாக்கள்,6,உழ்ஹிய்யா / அகீகா பற்றிய விளக்கங்கள்,2,குற்றங்களும் - அதற்கான தன்டனைகளும்,15,கொரோனா வைரஸ்,5,சிந்தனை மலர்கள்,23,சுத்தம் பற்றிய விளக்கங்கள்,4,திக்ர்களும் அதன் சிறப்புக்களும்,5,தீர்ப்புக்கள் (பத்வாக்கள்),3,துஆக்களும் அதன் சிறப்புப்களும்,12,தொழில்நுட்பத் தகவல்கள்,2,தொழுகையின் சிறப்புக்கள்,10,நபிமார்களின் வரலாற்றில் ஓர் ஏடு,4,பெண்கள் பகுதி,7,மறுமை நாள்,11,முஹம்மத் ﷺ அவர்கள்,17,மௌத் (மரணம்),7,ரமலான் நோன்பின் மான்புகள்,4,ஜனாஸா பற்றிய விளக்கங்கள்,3,ஜும்ஆ உடைய நாளின் சிறப்பு,8,ஸலவாத்துக்களும் அதன் சிறப்புகளும்,3,
ltr
item
As-Safeenah : மரணச் செலவு...
மரணச் செலவு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtqsOPtPDLI1bmj6ST5sGjssLJ-VSHdmyWdtfkPno3zpvwM_jJfwarJKVC2aA_hOLc1hUN3ZOpPD_pupOp23GefqMJR5zDr2D0l-f28F8nTEyHAuV8-pUTG8xJ0TJxfswbnUt2yT5y2eD-/s1600/Thumbnail_1588071638895.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtqsOPtPDLI1bmj6ST5sGjssLJ-VSHdmyWdtfkPno3zpvwM_jJfwarJKVC2aA_hOLc1hUN3ZOpPD_pupOp23GefqMJR5zDr2D0l-f28F8nTEyHAuV8-pUTG8xJ0TJxfswbnUt2yT5y2eD-/s72-c/Thumbnail_1588071638895.jpg
As-Safeenah
https://www.assafeenah.com/2019/12/blog-post_30.html
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/
https://www.assafeenah.com/2019/12/blog-post_30.html
true
915509540911267059
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content