من تكلم أثناء الآذان لا يستطيع أن ينطق شهادة أن لا إله إلا الله عند موته கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்...
من تكلم أثناء الآذان لا يستطيع أن ينطق شهادة أن لا إله إلا الله عند موته
கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: "பாங்கு சொல்லும் போது ஒருவர் பேசினால் மரண நேரத்தில் அவருடைய நாவில் கலிமாவராது" என எச்சரித்தார்கள்.
கேரளாவில் கோலிக்கூடு என்ற ஊரில் நடந்த சம்பவம்:-
கேரளாவில் கோலிக்கூடு கலன்ஜர் என்ற இடத்தில் இச் சம்பவம் நடைபெற்றது. அதாவது ஒரு நாள் அங்கு இருக்கிற பள்ளி இமாம் முஹம்மது ஹசன் பாகவி ஹழரத் அஸர் தொழுதுவிட்டு பள்ளியிலிருந்து வெளியே வரும்போது ஒரு காபிர் நபர் பள்ளியின் வெளிவாயலில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த இமாம் ஓதி பார்க்க வந்தவர் என்று எண்ணி அவரிடம் சென்ற போது அந்த நபர் இமாமிடம் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து என் தாய் மரணித்து விட்டார். அதனால் இப்பணத்தில் எதையேனும் வாங்கி பள்ளியிலுள்ளவர்களுக்கு கொடுங்கள் என்றார்.
அப்பொழுது இமாம் அந்த நபரிடம் அதற்கு எதற்குப் பணம் தருகிறீர்? என்று கேட்டார்கள். அந்த நபர் சொன்னார் என்னுடைய தாய் வீட்டில் வேலை செய்யும் பொழுது பாங்கின் சப்தம்கேட்டால் தலையில் துணி போட்டு வாசலில் அமர்ந்து அதை கேட்பார்கள். அதிகாலையிலும் எழுந்து இந்த பாங்கை மெய் மறந்து கேட்பார்கள். அவர்களுக்கு உடல்நிலை மோசமானதால் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததினால் மருத்துவர் இவர்களுக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று கைவிரித்து விட்டார்கள்.
என் தாய் அவர்களுடைய மரணத் தருவாயில் இருக்க அவர் அருகில் இருந்து அவருடைய மதத்தின் போதனையை குடும்மத்தார்கள் சொல்லிக் கொடுத்தவாறே இருக்க ஒரு நாள் அவர்கள் அந்த பாங்கை கேட்டுக் கேட்டு அவர்கள் உயிர் பிரியும்போது அஷ்ஹது அல்லாஇலாஹா இல்லல்லாஹு அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னவாறே மரணித்தார்.
பிறகு காஃபிர் ஆனா முறையில் அவர்களை எரிக்கப்பட்டது. இவ்வாறு அவர்களை எரித்தது மனதிற்கு வலிக்கிறது. அதனால் தான் இந்த பணம் அவர்களுக்காக கொடுக்க சொன்னேன் என்றார்.
பாங்கை மதித்ததினால், இவர்கள் பிறக்கும் போது காபிராக பிறந்தும், இறக்கும் போது முஸ்லிமாக மரணித்தார். பாங்கை கண்ணியப்படுத்தாததினால் முஸ்லிமாக பிறந்தும் காபிராக மரணித்தும் இருக்கிறார்கள்.
எனவே பாங்கு சொல்லும்போது அதற்கான கண்ணியத்தை கொடுத்து அல்லாஹ்வின் கிருபையினால் மரண தருவாயில் கலிமா சொல்லி மரணிக்கக்கூடிய பாக்கியத்தை வள்ள ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக.
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....