அதிஷ்டத்தால் முன்நேர ஆசைப்படுகிறவர்கள் நாம் பிரார்த்தித்தாள் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அள்ளிக் கொட்டுவான். இவர்கள் பட்டியலில் உங்கள் ...
தயவு செய்து வெளியே வாருங்கள்.. உழைக்காமல் முன்னேற முடியாது.
உழைக்காமல் தற்காலிகமாக மேலே வந்தவர் ஒரு போதும் நிலைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் எனப் பேச்சு அளவில் மட்டும் கூறிக் கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் கிடையாது.
அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது தான். நாம் ஒரு செயலை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே ஒரு புத்திஜீவிக்கு அழகு.
எனவேதான் எம் அருமை நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "தென்டித்தவன் பெற்றுக் கொள்வேன்". அதாவது யார் முயற்சி செய்கிறாரோ அவர் கண்டிப்பாக வெற்றி அடைவார்.
உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைத்தால் தான் நிறைவு பெறுகிறது.
ஊரிலேயே பெரிய ஆலமரம். அதற்கு கீழே ஒரு திண்ணை. அந்த திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான்.
அவன் வேலையே அந்தத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கால் ஆட்டிகொண்டு இருப்பது தான். வெட்டியாய் பேசிக் கொண்டு இருப்பது. சோறும் அப்படித்தான், கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான்.
இதுவே ரொம்ப நாளாய் நடந்து கொண்டு வந்தது. அவனை கொஞ்ச நாட்களாய் கவனித்து வந்த பெரியவர்
அவனிடம் போய்,தம்பி, இப்படி இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டியா கால் ஆட்டி கொண்டு இருப்பதைவிட, காஞ்சிபுரம் போய் கால் ஆட்டுனாலும் வேலைக்கு சோறு கிடைக்கும் என சொன்னார்.
அவன் உடனே அப்படியா? காஞ்சிபுரத்துல கால் ஆட்டுனாலே சோறா? என நடந்தே நாலு நாள் கழிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான்.
வந்த உடனே ஒரு நல்ல தின்னையாக பார்த்து உட்கார்ந்து, தன் வேலையை தொடங்கினான்.
இரவு வரை காலை வெட்டியாக ஆட்டிக் கொண்டே இருந்தான், யாரும் இவனை கண்டு கொள்வதாக இல்லை.
அப்போது அங்கே வந்த ஒருவரிடம் ஊரில் நடந்ததை கூறி, சோறு கிடைக்கும் என்றார். ஒன்றும் கிடைக்க வில்லையே என்றான்.
உடனே, அவர் அவனிடம்,
இது காஞ்சிபுரம் இங்கே பட்டு தொழில் மிக அதிகம். அதனால் நீ அந்த தொழில் செய்யும் போது காலை கொண்டு செய்ய வேண்டிய வேலை என்பதைத்தான் அந்த பெரியவர் அப்படி உனக்கு கூறி உள்ளார்.
நல்ல கால் இருந்தும் பிச்சை எடுக்க நினைக்கும் உன் எண்ணத்தை என்ன சொல்வது? என்றார் அம்மனிதர்.
உழைக்காமல் வாழலாம் என நினைத்த அவன் எண்ணமே, அவனை செருப்பால் அடித்தது போல தோன்றியது..
ஆம்.... நண்பர்களே..
ஒருவரின் உழைப்பு என்றுமே வீணாகப் போவது இல்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நச்சம் அவனுக்குக் கிடைத்தே தீரும். இதற்கு முன் மரணம் குரிக்கிட்டலே தவிர.
பலன் கிடைக்க வில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக் கூடாது. கடைசி வரைக்கும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
தொடந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.